search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை சீரமைக்ககோரி"

    அரக்கோணம் அருகே சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பனப்பாக்கம்-நெமிலி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் பனபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தென்மாம்பாக்கம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    தென் மாம்பாக்கம் திருமால்பூர் இடையேயான சாலை குண்டும், குழியுமாக உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பனப்பாக்கம்-நெமிலி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    ×